நடிகர் விஜய் அவர்களுக்கு பால்வினை நோய் தொற்று ஏற்பட்டதற்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக அவருடைய ஆண்குறியின் முன் தோலை(Foreskin) ஒரு குறிப்பிட்ட மருத்துவர் நீக்கியதாக ஒரு பேஸ்புக் பதிவு பலரது கண்ணில் பட்டது.
நடிகரும் தற்போதைய தமிழக முதல்வருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள் சுன்னத் செய்து கொண்டாரா? இல்லையா? என்பது அவரது தனிப்பட்ட தகவல் ஆகும். ஆனால் பகிரப்பட்டது, அரசியல் சேறு பூசும் போலிச் செய்தியாக இருந்தாலும் அதில் மருத்துவம் சார்ந்த தவறான தகவல் இணைக்கப்பட்டுள்ளமையானது பலரை தவறாக வழி நடத்தலாம்.
பால்வினை நோய் தொற்று ஏற்பட்டால் சிகிச்சையின் ஒரு பகுதியாக ஆண்குறியின் முன் தோல் நீக்கப்படுமா? என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
Fact Check Post: எந்த விதமான பாலியல் நோய்த்தொற்றுக்கும் ஆண்குறி தோலை அகற்ற வேண்டிய அவசியமில்லை. பதிவு அடிப்படை மருத்துவ புரிதல் அற்றது. இதன் காரணமாக யாரும் அச்சமடைய தேவையில்லை.
மருத்துவர்கள் எப்போது சுன்னத் செய்து கொள்ள பரிந்துரைப்பார்கள்?
வயதுக்கு வந்த ஆண்களால் அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கு இயலுமை இருக்க வேண்டும். ஆண்களுக்கு Phimosis என்னும் முன் தோல் குறுக்கம் பிரச்சனை இருந்தால் அவர்களால் அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க முடியாது போகலாம். Phimosis நிலைமையை சரி செய்யவும் வைத்தியர்கள் சுன்னத் செய்ய பரிந்துரைப்பது உண்டு.
அளவுக்கு அதிகமாக நீளமான முன் தோலை உடைய ஆண்களுக்கும் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சுன்னத் செய்து கொள்ள வைத்தியர்கள் பரிந்துரைப்பது உண்டு.
ஆண்களின் ஆண்குறியின் மொட்டில் Balanitis என்னும் நோய் நிலைமை ஏற்படுவது உண்டு. பாலனிடிஸ்(Balanitis) என்பது ஆண்குறியின் முனையிலும், மொட்டுப் பகுதியிலும் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சல் ஆகும்.
ஆண்குறி முனையில் சிவத்தல் மற்றும் வீக்கம், கடுமையான அரிப்பு அல்லது எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரியும் உணர்வு, முன்தோலின் அடியில் துர்நாற்றத்துடன் கூடிய திரவம் வெளியேறுதல், ஆண்குறியின் மொட்டில் சிறிய வெடிப்புகள் அல்லது புண்கள் ஏற்படுவது Balanitis இன் அறிகுறியாகும்.
பாலனிடிஸ் என்பது ஆண்குறியின் தலைப்பகுதியில்(Glans of Penis) ஏற்படும் ஒரு வகையான தோல் அழற்சி ஆகும். இது பொதுவாக விருத்தசேதனம்/சுன்னத்(Circumcision) செய்யப்படாத ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. இது ஒரு பாலியல் ரீதியாகப் பரவும் நோய் அல்ல.
ஆண்குறியைச் சுத்தமாகப் பராமரிக்காமல் இருப்பது மற்றும் முன்தோலின் அடியில் வியர்வை, அழுக்கு சேர்வது, ஆண்களின் ஆண்குறியில் ஈஸ்ட்(Candida), பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவது. அந்தரங்கப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட வாசனை திரவியங்கள் உள்ள சோப்புகள், ஷவர் ஜெல்(Shower gels) அல்லது லாண்டரி பவுடர்களால் ஏற்பட்ட ஒவ்வாமை. வெளியேறும் சிறுநீரில் உள்ள அதிகப்படியான சர்க்கரை(நீரிழிவு நோய்) பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியைத் தூண்டுவது போன்றன இதற்கான காரணங்களாக அமையலாம்.
அப்பகுதியை வெதுவெதுப்பான நீரால் தினமும் மென்மையாகக் கழுவி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கடுமையான சோப்புகள் அல்லது ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி பூஞ்சை எதிர்ப்பு(Antifungal) அல்லது பாக்டீரியா எதிர்ப்பு(Antibiotic) களிம்புகளைப்(Creams/Gels) பயன்படுத்தலாம். இந்நோய் மீண்டும் மீண்டும் தீவிரமாகப் பாதித்தால், மருத்துவர்கள் சிறிய அறுவை சிகிச்சையான விருத்தசேதனம்(Circumcision) செய்யப் பரிந்துரைக்கலாம்.
குறிப்பு: பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ள நேரிட்டால் 40 நாட்களுக்கு பிறகு கீழ்க்கண்ட மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளவும்.
HIV 1&2, VDRL, HbsAg
இவற்றுள் HIV மட்டுமே குணப்படுத்த இயலாது.
Fact Checked by Balaji
Evidence - Nil
Scientific Facts - No Support in this Case
Final Conclusion - Wrong information.
நன்றி,
Don Raj
Keywords: சுன்னத் செய்த ஆண்களுக்கு பால்வினை நோய் தொற்றுகள் ஏற்படாதா?


Comments
Post a Comment