வேஷ்டி என்பது ஆண்கள் உடுத்தும் ஆடையாகும். இது உடம்பின் கீழ் பாகத்தில், அதாவது இடுப்பில் உடுத்தப்படுகிறது. பொதுவாக, தமிழக மக்கள் வெண்ணிற வேஷ்டி மட்டுமே உடுத்துகின்றனர். வெண்ணிற வேஷ்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும். தமிழர்கள் வேட்டியை வேட்டி என்பர். மலையாளிகள் வேட்டியை முண்டு என்பர். வட இந்தியர்கள் வேட்டியை தோதி என்பர்.
தமிழர்களும் கேரள ஆண்களும் வேட்டி அணியும் முறை ஒன்றாக இருப்பினும், அவர்கள் அதன் கரைகளை வெளிக்காட்டும் விதம் வித்தியாசமாகும். வட இந்தியர்கள் அணியும் வேட்டி ஒரு பேண்ட் போல இருக்கும்.
வேஷ்டி என்பது தமிழர்களின் அடையாளம். பருத்தி நூலில் நூற்கும் வேஷ்டியை நம் முன்னோர்கள் கட்டி வந்தனர். வேஷ்டியில் முகூர்த்த வேஷ்டி, தற்காப்பு கலை வேஷ்டி, பட்டு வேஷ்டி, பூஜை வேஷ்டி, சாதாரண வேஷ்டி ஆகிய பல வேஷ்டிகள் உள்ளன.
இதை வேஷ்டியின் கரையின் வண்ணம் வெளிப்படுத்தும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தக்க வேஷ்டியின் கரை மஞ்சள், பச்சை, நீலம், காவி என வேறுபடும். வேஷ்டி கட்டுவதால் ஆபத்து விலகி நிற்கும். ஒவ்வொரு வகையான வேஷ்டிக்கும் வெவ்வேறு வகையான நன்மைகள் உண்டு. பழைய காலங்களில் ஒருவர் கட்டி இருக்கும் வேஷ்டி அவரை அடையாளப்படுத்துவதாகவும் திகழ்ந்தது.



































Comments
Post a Comment