பெண் ஒருவர் குவைத்தில் பணிபுரிகின்ற தனது கணவருக்கு அனுப்புவதற்காக தனது தொலைபேசியில் கொஞ்சம் செக்ஸியாக புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.
அந்த பெண் வீட்டு வேலை செய்கின்ற போது அவருடைய சிறிய மகன் தொலைபேசியை எடுத்து தவறுதலாக பேஸ்புக்ல அந்த புகைப்படங்களை Share பண்ணி விட்டான்.
இதனை அவதானித்த அவருடைய உறவினர்கள் அந்த பெண்ணுக்கு Call பண்ணி திட்டிய போதே அந்த பெண்ணுக்கு இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
உடனடியாக அந்த பெண் புகைப்படங்களை நீக்கி விட, முறை தவறிப் பிறந்த ஒரு சில ஆண் குஞ்சுகள் அந்த புகைப்படங்களை Delete செய்வதற்கு முன் Screen Shot/ Save பண்ணிக் கொண்டு இந்த பெண்ணுக்கு Messenger மூலமாக தொந்தரவு கொடுத்துள்ளனர்.
அந்த பெண் கடும் மன உளைச்சலுக்கும் ஆளானார். இதற்கு மிக முக்கியமான காரணம் நம்மை அறியாமல் Facebook நிறுவனத்திற்கு அல்லது Meta Apps(செயலி) க்கு நாம் கொடுத்துள்ள சில அனுமதிகள்(Permissions) ஆகும்.
அதனடிப்படையில் பேஸ்புக் நிறுவனம் உங்களது போட்டோக்களின் விவரங்களை அணுகுவதற்கும், உங்களது போட்டோ பயன்பாட்டு முறைகளைக் கண்காணிப்பதற்கும் அனுமதி கொடுக்கிறீர்கள்.
தனிப்பட்ட அல்லது ரகசியமான புகைப்படங்கள் உங்கள் போனில் இருந்தாலும் அந்த அனுமதி மூலம் பேஸ்புக் வசம் சென்று விடும்.
தொலைபேசியில் தவறுதலாக கை பட்டாலும் உங்கள் போன் கேலரியில் உள்ள புகைப்படங்களை மிக இலகுவாக பேஸ்புக்கில் Status அல்லது Posts ஆகி விடும். அதன் பிறகு என்ன உங்களது தனிப்பட்ட புகைப்படங்களை இந்த உலகமே பார்த்து ரசிக்கும்.
இதிலிருந்து உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும் என்றால் Settings/Facebook App Info சென்று Facebook App இற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து Permissions களையும் நீக்கி, அந்த Apps யைப் பயன்படுத்தும் போது கேட்கப்படும் Permissions க்கு Don't Allow அல்லது Allow Limited Access(மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி) கொடுப்பதே மிகவும் பாதுகாப்பானது.
ஒவ்வொரு முறையும் போட்டோ அப்லோட் செய்யும் போது புதிய அனுமதி கேட்காமல் செயலி தடையின்றி வேலை செய்வதை தடுக்க Camera Roll Sharing Suggestions யை Off செய்து வைத்துக் கொண்டால் நாம் பாதுகாப்பாக இருந்து கொள்ள முடியும். தவறுதலாகவும் புகைப்படங்கள் அப்லோட் ஆகாது.
அது மாத்திரமல்லாது கலரிக்கு ஒரு லொக் போட்டு வைத்து கொண்டால் எல்லாம் செளக்கியமே! அந்தரங்கமான புகைப்படங்களை, வீடியோக்களை இலகுவாக அனுக முடியாத படி Second Space, Secure Folder இனுள் சேமித்து வைப்பது இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க மேலும் உதவும்.




Comments
Post a Comment